Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் எல்லையில் நேபாள போலீஸ் திடீரென துப்பாக்கிச்சூடு

பீகார் எல்லையில் நேபாள போலீஸ் திடீரென துப்பாக்கிச்சூடு

By: Karunakaran Mon, 20 July 2020 11:50:36 AM

பீகார் எல்லையில் நேபாள போலீஸ் திடீரென துப்பாக்கிச்சூடு

இந்தியாவின் நட்பில் இருந்து கடந்த சில மாதங்களாக நேபாளம் மாறியுள்ளது. நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பகுதிகளை நேபாளம் உரிமைக்கோரி வருவதால் இருநாடுகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோரமாக அமைந்துள்ள கிருஷ்ணகஞ் மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

bihar border,nepal police,gunfire,indian injury ,பீகார் எல்லை, நேபாள போலீஸ், துப்பாக்கிச் சூடு, இந்திய காயம்

தற்போது, எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேபாள போலீசார் இன்று அத்துமீறி கிருஷ்ணகஞ் மாவட்டத்தை சேர்ந்த சிலரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்தியர் ஒருவர் படுகாயமடைந்தார். அதன்பின் உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கும் இருநாட்டு எல்லை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக நேபாள படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :