Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்தின் மூன்று அமைச்சக கட்டடம் முன்பு மர்ம பொருள்

நேபாளத்தின் மூன்று அமைச்சக கட்டடம் முன்பு மர்ம பொருள்

By: Karunakaran Tue, 21 July 2020 10:02:22 AM

நேபாளத்தின் மூன்று அமைச்சக கட்டடம் முன்பு மர்ம பொருள்

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொரோனா காலத்திலும் ஆங்காங்கு வெடிவிபத்து, துப்பாக்கி சூடு போன்றவை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் பல நாடுகளில் இயற்கை பேரிடர்களாலும், தாக்குதல் சம்பவங்களாலும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

nepal,ministry building,mystery subject,bomb disposal team ,நேபாளம், அமைச்சக கட்டிடம், மர்ம பொருள், வெடிகுண்டு அகற்றும் குழு

இந்நிலையில், நேபாள அரசின் மூன்று அமைச்சகத்தின் கட்டடம் முன்பு மர்மப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று, சுதுர்பாசிம் மாகாணத்தின் சட்டசபை கட்டடம் முன்பும் மர்மப் பொருள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள் காரணமாக அந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது மர்ம பொருள் கிடக்கும் இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நீடித்துள்ளது.

Tags :
|