Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் அரசை கேள்வி மேல் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

பாகிஸ்தான் அரசை கேள்வி மேல் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

By: Nagaraj Mon, 17 July 2023 1:24:34 PM

பாகிஸ்தான் அரசை கேள்வி மேல் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

இஸ்லாமாபாத்: கடனில் இருக்கும்போது ரூ.40 கோடி செலவில் இது முக்கியமா என்று இந்தியாவை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அரசை அந்நாட்டை சேர்ந்த நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

பக்கத்து நாடான இந்தியா, சந்திரயான் விண்கலத்தையே விண்ணுக்கு அனுப்பி விட்ட நிலையில், பாகிஸ்தானிலோ 500 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடியை வானுயர பறக்க விடுவதற்கு அரசு ஆர்வம் காட்டுவதாக, அந்நாட்டு நெட்டிசன்கள் அரசை கேலி செய்து வருகின்றனர்.

pakistan,netizens,india,chandrayaan,need it ,பாகிஸ்தான், நெட்டிசன்கள், இந்தியா, சந்திராயன், தேவையா

ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு, 40 கோடி ரூபாய் செலவில், 500 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடியை பறக்கவிட திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே மாகாண அரசு கடனில் மூழ்கியுள்ள நிலையில், இந்த பெரும் செலவு தேவையா என்பது பாகிஸ்தான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

Tags :
|