- வீடு›
- செய்திகள்›
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய் .. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி இன்று அறிமுகம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் .. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி இன்று அறிமுகம்
By: vaithegi Thu, 01 Sept 2022 09:49:20 AM
இந்தியா: பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் ஆகிய உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு.இதை அடுத்து இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே தான் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. 2-ம் மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தடுப்பூசியை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தடுப்பூசி புற்றுநோய் தவிர்ப்பில் மிக முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.