Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 16 Aug 2020 3:17:01 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்து 489 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.

india,corona virus,corona death,corona prevalence ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடைய 6 லட்சத்து 77 ஆயிரத்து 444 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 53 ஆயிரத்து 321 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 944 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|