Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

By: Karunakaran Mon, 02 Nov 2020 2:25:06 PM

அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்தஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் நடத்தப்பட்ட என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

new poll results,us presidential election,trump,joe biden ,புதிய கருத்துக் கணிப்பு, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், டிரம்ப், ஜோ பிடென்

என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவில், டிரம்பைவிட ஜோ பிடன் 10 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும், ஜோ பிடனுக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் அதிகம் கொண்ட அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, புதிய ஹாம்ப்ஷயர், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 12 மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த 12 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்களும், ஜோ பிடனுக்கு ஆதரவாக 51 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த மாநிலங்களில் ஜோ பிடன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தபால் மூலமாகவோ அல்லது நேரில் முன்கூட்டியே வாக்களித்த வாக்காளர்களிடையே பிடனுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. இருப்பினும், வாக்களிக்காத வாக்காளர்களிடையே டிரம்புக்கு அதிக ஆதரவு உள்ளது.

Tags :
|