Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போக்குவரத்து துறை காலி பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது .. அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்து துறை காலி பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது .. அமைச்சர் சிவசங்கர்

By: vaithegi Tue, 09 May 2023 12:11:41 PM

போக்குவரத்து துறை காலி பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது   ..  அமைச்சர் சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெறுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிப்பு ........

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் பல காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என்பதால் அத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பெற தகவல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது.

software,transport department ,மென்பொருள் , போக்குவரத்து துறை

இதனை அடுத்து இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகும். அதன் பின் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

மேலும் பேசிய அவர் முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையை திறந்து வைத்தார். தமிழகத்தில் புதிதாக 2000 பேருந்துகள் வாங்க டெண்டர் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :