கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை
By: Nagaraj Sat, 27 June 2020 8:17:20 PM
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் டி-செல்களை பாதிக்கிறது. இதனைத் தடுக்க எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஒரு புதிய வழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் இம்யூனாலஜி என்ற மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியில் 10 கொரோனா நோயாளிகள் பயன்படுத்தப்பட்டனர். .
இவர்கள் அனைவருமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் 10 ஆரோக்கியமான
நபர்களில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது டி-செல்கள்
தாக்கப்பட்டுள்ளன.
சைட்டோகைன் என்ற ரசாயனத்தை இந்த டி-செல்கள்
சுரக்கின்றன. இவை மருத்துவ குணங்கள் கொண்டது. இதன்மூலம் ஓரளவுக்கு உடலில்
எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்