புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்...அண்ணாமலை
By: vaithegi Thu, 02 Nov 2023 11:46:03 AM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைப்படங்களில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: லியோ படத்தில் இடம் பெற்ற ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
இதையடுத்து எந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றதோ அதே அளவுக்கு சர்ச்சையையும் கிளப்பியது. அதற்கு காரணம் பாடலில் இடம் பெற்ற ‘விரல் இடுக்குல தீ பந்தம்’ என்ற வரி. “ விரல் இடுக்குல தீ பந்தம் அப்படினா சிகரெட்டாக தான் இருக்க வேண்டுமா? ஏன் அது பேனாவா இருக்கலாம்ல, ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க’ ஏன் அது கூல்லாக இருக்கலாம்ல,
சினிமாவ சினிமாவா பாருங்க, பள்ளி, கல்லூரி பக்கத்துல கூடதான் டாஸ்மார்க் இருக்கு அதுக்காக டெலியி ரெண்டு ரவுண்ட் அடிச்சிட்டா பள்ளிக்கு போறாங்க. மக்கள் தான் மன்னர்கள், நான் அதை நிறைவேற்றும் தளபதி. எனக்காக அளவில்லா அன்பை கொடுத்த மக்களுக்கு நிச்சயம் எதாவது செய்வேன் என அவர் கூறினார்.
இந்நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதையடுத்து இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள அண்ணாமலை, 30, 40 ஆண்டுகளாக பழையவர்களே இருக்கிறார்கள். புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும். எல்லாருடைய சித்தாந்தத்தையும் மக்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என அவர் கூறினார்.