சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து வெளியான தகவல்!
By: Monisha Mon, 25 May 2020 3:31:43 PM
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
சென்னையில் 4 மண்டலங்களில் மட்டும் நேற்று வரை ஆயிரத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஒரு மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தண்டனையார்பேட்டை மண்டலத்தில் தற்போது 1044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை ராயபுரம் மண்டலத்தில் 1981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தை அடுத்து கோடம்பாக்கத்தில் 1460 பேர்களும், திருவிக நகரில் 1188 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1118 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மண்டலங்களில் மட்டும் மொத்தம் 6791 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அண்ணா நகரில் 867 பேர்களும், வளசரவாக்கத்தில் 703 பேர்களும், அடையாறில் 579 பேர்களும், அம்பத்தூரில் 446 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.