சென்னை தினம் .. எலியட்ஸ் கடற்கரைக்கு செல்வதில் சில போக்குவரத்து மாற்றம்
By: vaithegi Sat, 20 Aug 2022 5:39:30 PM
சென்னை :ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி அன்று “சென்னை தினம்”
கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே அதன்படி இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை
மறுநாள் சென்னை தினம் கொண்டாட உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு 2 நாட்கள்
பெசன்ட் நகரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அந்த வகையில்
பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை
நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் சில மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் எலியட்ஸ்
கடற்கரைக்கு செல்ல விரும்புவர்கள், 7வது அவென்யுவிற்கும் 6வது
அவென்யுவிற்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வருபவர்கள்
16வது குறுக்குத் தெரு வழியாக 2வது அவென்யூ நோக்கி திருப்பி
விடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போன்று 16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது அவென்யூ நோக்கிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் வருபவர்கள் 2வது அவென்யூ மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படுவார்கள். இதனையடுத்து 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது அவென்யூ நோக்கி வருபவர்களுக்கு செல்ல தடை என்றும் இந்த வழிகளில் வருபவர்கள் 3வது மெயின் ரோடு, 2வது அவென்யூ சந்திப்பில் திருப்பி விடப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எலியட்ஸ் கடற்கரையில் 4வது மெயின் ரோடு, 5வது அவென்யூவில் இருந்து 6வது அவென்யூவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4வது மெயின் ரோடு, 5வது அவென்யூ வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள்.