கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை
By: vaithegi Tue, 03 Jan 2023 9:24:01 PM
சென்னை: சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு
கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள 220-க்கும்
மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி
கொண்டு வருகிறது.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி
செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து
வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.
இதனை அடுத்து தமிழகத்தில்
இன்றைய கொரோனா பாதிப்பு பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில்
இன்று புதிதாக 10 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 6 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 35,94,466 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 10 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35,56,328 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 89 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது