Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற மார்ச் 4ம் தேதி அன்று இந்த 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

வருகிற மார்ச் 4ம் தேதி அன்று இந்த 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 21 Feb 2023 1:50:12 PM

வருகிற மார்ச் 4ம் தேதி அன்று இந்த 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சென்னை: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ... தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் ஐயா வைகுண்டர் சாமிகளும் ஒருவர். இவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கும் பக்தர்கள் கருதுகின்றனர். மேலும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் என்ற புகழுக்குரியவர்.

அத்துடன் வைகுண்ட சுவாமிகள் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

local holidays,tirunelveli,kanyakumari,thoothukudi , உள்ளூர் விடுமுறை,திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி

எனவே அதன்படி இந்த ஆண்டில் மார்ச் 4-ம் தேதி அன்று வைகுண்டரின் அவதார தினமாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.அந்தவகையிக் இந்தாண்டு மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

எனவே இதனையொட்டி, அய்யா அவதார தினத்தை அவரது பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்து ஆட்சியர்கள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :