Advertisement

வருகிற பிப்ரவரி மாதம் 27 -ம் தேதி இங்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Mon, 13 Feb 2023 6:28:19 PM

வருகிற பிப்ரவரி மாதம் 27 -ம் தேதி இங்கு உள்ளூர் விடுமுறை

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக கடந்த மாதம் 18-ம் தேதி அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்தல் தேதி வருகிற 27 -ம் தேதி என அறிவிக்கப்பட்டது.

மேலும் தேர்தல் காரணமாக நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

local holiday,election ,உள்ளூர் விடுமுறை,தேர்தல்

இதனை அடுத்து இந்த தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப். 27-ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :