Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற மே 5-ந் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

வருகிற மே 5-ந் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 25 Apr 2023 09:51:58 AM

வருகிற  மே 5-ந் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என்று இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

இதனை அடுத்து இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற 30-ம் தேதி நடக்கிறது. வருகிற மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும்.

local holiday,madurai ,உள்ளூர் விடுமுறை,மதுரை

சிகர நிகழ்ச்சியாக மே 2-ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். அடுத்த நாள் 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். மே 4-ந் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.

இதையடுத்து சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான வருகிற வருகிற மே 5-ந் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மே 5-ந் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :