இன்று கேரளா முழுவதும் 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
By: Nagaraj Thu, 29 Dec 2022 4:37:39 PM
திருவனந்தபுரம்: இன்று கேரளா முழுவதும் 56 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு மற்றும் அதன் துணைக் குழுக்களின் அலுவலகங்கள் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாப்புலர் பிராண்ட் அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து, அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
கேரளாவில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று கேரளா முழுவதும் 56 இடங்களில்
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு மற்றும் அதன் துணைக் குழுக்களின் அலுவலகங்கள்
என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில்
3 இடங்கள், எர்ணாகுளத்தில் 8 இடங்கள், மலப்புரம் மற்றும் ஆலப்புழாவில் தலா
4 இடங்கள் என 56 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், பாப்புலர்
ஃப்ரெண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.