Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவுநேர புறநகர் ரயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவுநேர புறநகர் ரயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து

By: vaithegi Wed, 01 Nov 2023 09:42:19 AM

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவுநேர புறநகர் ரயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து


சென்னை: 3 நாட்களுக்கு கடற்கரை- தாம்பரம் இரவு நேர ரயில் சேவை ரத்து ....சென்னை பரங்கிமலை வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இரவு 10.20, 10.40, 11.5, 11.30 மணிக்கு புறப்படும் கடற்கரை- தாம்பரம் புறநகர் ரயில், இரவு 10.40, 11.20-க்கு புறப்படும் தாம்பரம்- கடற்கரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இரவு 10.10-க்கு புறப்படும் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை புறநகர் ரயிலும் நாளை முதல் ரத்து செய்யபட்டுள்ளது.

suburban trains,chennai beach,tambaram ,புறநகர் ரயில்கள் ,சென்னை கடற்கரை, தாம்பரம்

இதனை அடுத்து பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இரும்புப்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான மின்சார ரயில் சேவை நேற்று காலை 10.20 மணி முதல் மதியம் 2.45 மணி வரை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Tags :