எந்த கழகங்களுடனும் கூட்டணி இல்லை; நடிகர் கமல் திட்டவட்டம்
By: Nagaraj Wed, 04 Nov 2020 09:05:09 AM
எந்த கழகங்களுடனும் கூட்டணி இல்லை... தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் மக்கள்நல கூட்டணி என மூன்றாவது அணி அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.
தேர்தலுக்காக கமல்ஹாசனும் தனது கட்சிப் பணியைத் தொடங்கியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று
நாளேடுகளில் வந்த செய்தியை சுட்டிக் காட்டினார். திராவிடம் என்ற வார்த்தை
தேசிய கீதம் உள்ளவரை இருக்கும் என்று பேசியவர் நாம் சொல்வது கழகங்கள் உடன்
கூட்டணி இல்லை என்பதை தான் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும்
மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர், இதனால் மூன்றாவது அணி அமைப்பதற்கு
தேவை எழுந்துள்ளதாக கமல்ஹாசன் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில்
கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவது பற்றி பேசிய அவர் ஆம் நான் பெறுவது
உண்மைதான். அதனை என்னை வாழ வைத்ம அவர்களிடமே மீண்டும் கொட்டுவேன் என்று
கமல் பேசியுள்ளார்.
இதனிடையே, இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் புதுவை மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளார்.