சென்னை விமானங்கள் வரக்கூடாது; அதிரடியாக தடை விதித்தது கொல்கத்தா அரசு
By: Nagaraj Sat, 04 July 2020 8:15:47 PM
சென்னை விமானங்கள் வரக்கூடாது... சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையம் தடை விதித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இதையடுத்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதிலும், சென்னையில் மட்டும் 64,689 பேருக்கு நோய் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. 1,009 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நாளை
மறுநாள் முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு
கொல்கத்தா விமான நிலையம் தடை விதித்துள்ளது.
இதேபோல, டெல்லி,
மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து வரும்
விமானங்களுக்கும், மறு உத்தரவு வரும் வரை தடைவிதிக்கப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது