தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை
By: vaithegi Fri, 16 Dec 2022 9:23:18 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணில் பதிவாகி வருகிறது.
இதனால், மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆண், 2 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு உள்பட மொத்தம் 8 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 30 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா தோற்று பாதிப்பால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு பதிவாகவில்லை. எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.