Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

By: vaithegi Tue, 14 Nov 2023 11:32:02 AM

மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்


சென்னை : சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி, டெல்டா மாவட்டமான கடலூர் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077, 04142 - 220700, 04142 – 233933 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இதையடுத்து இதில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். இன்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

fishermen,chennai meteorological centre,to catch fish ,மீனவர்கள் ,சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ,மீன்பிடிக்க


அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கோட்டக்குப்பம் என கடல்சார் மீன்பிடிப் பகுதிகளில் 2,045 சிறுபடகுகளும், 35 விசைப்படகுகளும் பயன்பாட்டில் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்துக்கு வானிலை ஆராய்ச்சி மையத்தால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளதால் மீன வர்கள் கடலுக் குள் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று லேசாக மழை பெய்த தது. இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையத்தால் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், “தமிழகத்தின் கடலோரபகுதிகளில் நேற்றும் இன்றும் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீவேகத்தில் வீசக்கூடும். அதனால் புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்'' என்று மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :