Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது - ராகுல் காந்தி

நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது - ராகுல் காந்தி

By: Karunakaran Wed, 02 Sept 2020 10:19:52 AM

நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது - ராகுல் காந்தி

இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய சமூக ஊடகங்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிகையில் கட்டுரையில் இதுகுறித்து செய்தி வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பாராளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

interfere,country,rahul gandhi,congress leader ,தலையீடு, நாடு, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கம் மீதான ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’பின் வெட்ககேடான தாக்குதலை சர்வதேச ஊடகங்கள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், ஒரு வெளிநாட்டு நிறுவனம் மட்டுமல்ல, நம் நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Tags :