எனக்கு எவரும் அழுத்தங்கள் பிரயோகிக்கவில்லை; மஹிந்த தேசப்பிரிய தகவல்
By: Nagaraj Sat, 07 Nov 2020 7:16:02 PM
எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கவில்லை... நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல் போனது கவலை அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் 12ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்து அவருக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக ஊடகங்கள் வினவியப்போத அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளதாவது, “அரச
சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்ததொரு பதவியையும் ஏற்கும் எண்ணம்
எனக்கு கிடையாது.
எனது ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில்
வாழுவதற்கு ஆசைப்படுகின்றேன். மேலும், நான் தேர்தல் ஆணைக்குழுவின்
தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை
பிரயோகிக்கவில்லை.
ஆனாலும், மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல் போனது கவலை அளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.