Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

By: Karunakaran Tue, 06 Oct 2020 4:31:24 PM

கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிபர் டிரம்ப் தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார். வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த டிரம்ப், புகைப்படத்திற்கு தம்ஸ் அப் காட்டினார்.

afraid,corona infection,us,trump ,பயம், கொரோனா தொற்று, அமெரிக்கா, டிரம்ப்

ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த டிரம்ப், மாஸ்க்கை கழற்றி தனது பாக்கெட்டில் டிரம்ப் வைத்துக்கொண்டார். மேலும், கொரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தும் வகையில், தொற்று பாதித்த டிரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

அதற்குமுன், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விரைவில் பங்கேற்பேன்! பொய்யான செய்தி நிறுவனங்கள் பொய்யான தேர்தல் முடிவுகளை மட்டுமே வெளியிடுகின்றன என்று கூறினார். அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ள கொரோனாவை டிரம்ப் குறைத்து மதிப்பிடுவதால் அவர் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|