Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை

நாளை சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை

By: vaithegi Fri, 07 Apr 2023 3:59:52 PM

நாளை சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை

சென்னை : பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு நாளை தமிழகத்திற்கு வருகை புரிய இருக்கிறார். இதில் முதலாவதாக நாளை சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைக்க இருக்கிறார்.

அதன்பின் மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் – கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

public,chennai,marina beach ,பொதுமக்கள் ,சென்னை ,மெரினா கடற்கரை

இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக, மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காவல்துறை சார்பாக பல்லாயிரக்கணக்கான போலீசார்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். இதை தொடர்ந்து, நாளை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|