Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய ராணுவம் ரோந்து பணியில் ஈடுபடுவதை எந்த உலகின் சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்

இந்திய ராணுவம் ரோந்து பணியில் ஈடுபடுவதை எந்த உலகின் சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்

By: Karunakaran Fri, 18 Sept 2020 4:43:42 PM

இந்திய ராணுவம் ரோந்து பணியில் ஈடுபடுவதை எந்த உலகின் சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்

மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதற்கு ராஜ்நாத சிங் பதிலளித்தார்.

மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் பேசுகையில், போரை தொடங்குவது நமது கைகளில் உள்ளது. ஆனால் அது எங்கு முடியும் என்பது நமது கைகளில் இல்லை. அமைதி சில சமயங்களில் சமரசத்திற்கு உட்படுத்தப்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. நாங்கள் முன்பை விட மிகவும் வித்தியாசமானவர்கள் ஆனாலும் அமைதியை நிலைநாட்டுவதில் குறிக்கோளாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

world,indian army,patrolling,rajnath singh ,உலகம், இந்திய ராணுவம், ரோந்து, ராஜ்நாத் சிங்

மேலும் அவர், 130 கோடி மக்களுக்கும் நான் சொல்லிகொள்வது என்னவென்றால் நாங்கள் உங்களை வீழ்த்த விடமாட்டோம். நாம் யாருக்கும் தலைவணங்கமாட்டோம். யாரையும் நமக்கு தலைவணங்க வைப்பதும் நமது நோக்கமல்ல என்று கூறினார். அதன்பின், முன்னாள் ராணுவ மந்திரியும், காங்கிரஸ் எதிர்க்கட்சி உறுப்பினருமான ஏகே அந்தோனி, இந்திய வீரர்களின் ரோந்து பணியை சீன வீரர்கள் தடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரோந்து அமைப்பு மிகவும் பாரம்பரியமிக்கது மட்டுமல்லாமல் மிகவும் நெறிப்படுத்தப்பட்டது. இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று கூறினார்.

Tags :
|