ஆசிரியர்களுக்கு எந்த வருத்தமும் வேண்டாம்... இது உங்களுக்கான ஆட்சி
By: Nagaraj Sat, 04 Feb 2023 6:49:46 PM
ஈரோடு: இது உங்களுக்கான ஆட்சி... ஆசிரியர்கள் எதற்கும் வருந்த வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சிதான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பணிகளில் திமுக அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஈரோட்டில் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் திருச்சிக்கு சென்ற அவர் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர்
ஸ்டாலின் பரிசீலித்து நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். கடந்த 10 ஆண்டுகளாக
ஆசிரியர்கள் எந்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களைக் கண்டும் காணாத
ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆனால் ஆசிரியர்களின் வலியும் வேதனையும்
எங்களுக்குத் தெரியும். எனவே, நிதி நிலைமைக்கு ஏற்ப ஆசிரியர்களின்
கோரிக்கைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். ஆசிரியர்கள் எதற்கும்
வருத்தப்பட தேவையில்லை.
இது உங்களுக்கான அரசு.
அந்த நம்பிக்கையை நிலைநாட்ட முதல்வர் ஸ்டாலின் எப்போதும் பாடுபடுவார். துறை
அமைச்சராக, ஆசிரியர்களை கைவிட மாட்டேன். மாணவர்கள் நம்பிக்கையுடனும்
அச்சமின்றியும் பொதுத் தேர்வுகளை எழுத வேண்டும். இதற்காக அவர்களுக்கு
தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வகுப்புகள் நடத்துவது குறித்து
ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.