Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகா தேர்தலில் ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த 2 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு

கர்நாடகா தேர்தலில் ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த 2 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு

By: Nagaraj Fri, 21 Apr 2023 11:19:52 PM

கர்நாடகா தேர்தலில் ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த 2 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு

கர்நாடகா: வேட்பு மனுக்கள் ஏற்பு... கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

வருகிற மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

aiadmk finds field,ops candidate,kolar ,அதிமுக, களம் காண்கிறது, ஓபிஎஸ், வேட்பாளர், கோலார்

இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளரான மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் கோலார் மற்றும் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாரின் மனு அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் அதிமுக நேரடியாக களம் காண்கிறது.

Tags :