Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைதியாக இருக்குமாறு அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

அமைதியாக இருக்குமாறு அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

By: Monisha Sat, 13 June 2020 5:14:14 PM

அமைதியாக இருக்குமாறு அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

தென் கொரியாவின் தலைநகர் சியோலுடன் இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா அறிவிப்பு வெளியிட்டது. இந்த காட்டத்துக்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணமும் இருப்பதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

தென் கொரியாவின் சில சமூக ஆர்வலர்கள் வட கொரியாவின் எல்லையில் அத்துமீறி அதிபர் கிம் ஜாம் உன் ஒரு சர்வாதிகாரி என்று அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அத்துமீறி சில சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளால் வட கொரியாவின் மதிப்பு கெடுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால் இருநாட்டு எல்லையிலும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என எச்சரித்து இருந்தார். இத்தகைய காட்டத்துக்குப் பின்னர் வட கொரியா, தென் கொரியாவுடன் இருந்து வந்த அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டது.

us,north korea,south korea,president kim jong un ,அமெரிக்கா,வட கொரியா,தென் கொரியா,அதிபர் கிம் ஜாங் உன்,எச்சரிக்கை

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் தென்கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா இதில் கருத்துச் சொல்ல வரும் என நினைத்த வடகொரியா தற்போது, அமெரிக்காவை தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக இருக்குமாறு எச்சரிக்கை செய்திருக்கிறது.

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த அமெரிக்கா விரும்பினால், வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் இருந்து விலகி, அது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். என அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்ததாக அமெரிக்காவின் விவகாரத் துறை இயக்குநர் ஜெனரல் குறிப்பிட்டார்

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்ற விவகாரங்களில் பல ஆண்டுகளாக கருத்து மோதல் இருந்து வருகிறது.

Tags :
|