Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் கொரிய மீன்வள அதிகாரியை சுட்டுக் கொன்று பஸ்பமாக்கிய வட கொரிய படைகள்

தென் கொரிய மீன்வள அதிகாரியை சுட்டுக் கொன்று பஸ்பமாக்கிய வட கொரிய படைகள்

By: Karunakaran Thu, 24 Sept 2020 5:21:38 PM

தென் கொரிய மீன்வள அதிகாரியை சுட்டுக் கொன்று பஸ்பமாக்கிய வட கொரிய படைகள்

வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கடல் எல்லையாக செயல்படும் இராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே, கடந்த வாரம் தென் கொரிய மீன்வள அதிகாரி காணாமல் போனார். அந்த அதிகாரி வட கொரியாவிற்குள் நுழைய முயன்றதாக ஆதாரங்கள் காட்டுவதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென் கொரிய இராணுவம், 47 வயதான அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் வட கொரிய படைகள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் செயல்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. பின்னர், அவரது உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து பஸ்பமாக்கியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

north korean forces,shoot,south korea,fisheries officer ,வட கொரிய படைகள், துப்பாக்கி சூடு, தென் கொரியா, மீன்வள அதிகாரி

காணாமல் போன மீன்வள அதிகாரி வட கொரிய ரோந்து படகில் வைத்து விசாரிக்கப்பட்டதாகவும், பின்னர் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் வட கொரிய படையினர் அவரை சுட்டுக் கொன்றதாகவும், அதன்பின், அவரது உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து பஸ்பமாக்கியதாக உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜெனரல் அஹ்ன் யங்-ஹோ, வட கொரியாவின் இதுபோன்ற அட்டூழியத்தை எங்கள் இராணுவம் கடுமையாக கண்டிக்கிறது, மேலும் விளக்கங்களை வழங்கவும், பொறுப்புள்ளவர்களை தண்டிக்கவும் கடுமையாகக் கோரிக்கை விடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|