Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Sat, 29 Oct 2022 08:50:36 AM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடக்கம்

சென்னை: பருவமழை இன்று முதல் தொடக்கம் .... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்த முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

monsoon,chennai ,பருவமழை ,சென்னை

இதனை அடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா உள்பட தென் இந்திய பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது எனவும், தமிழகத்தை பொறுத்தவரையில் இயல்பையொட்டியே பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

Tags :