Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வர வாய்ப்பில்லை... தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படை வராதாம்

வர வாய்ப்பில்லை... தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படை வராதாம்

By: Nagaraj Thu, 28 May 2020 5:48:14 PM

வர வாய்ப்பில்லை... தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படை வராதாம்

வடமாநில விவசாயிகளை அலற விட்டுள்ள வெட்டுக்கிளிகள் படை தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க பாலைவனங்களை சேர்ந்த வெட்டுக்கிளிகள் இரை தேடி ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்துள்ளன. வய்ல்களில் உள்ள மொத்த பயிர்களையும் சில நிமிடங்களில் தின்று தீர்க்கின்றன இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம்.

பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேச விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற வெகுவாக போராடுகிறார்கள். வடக்கே வந்த வேலை முடிந்ததும், வெட்டுக்கிளிகள் கூட்டம் தெற்கே படை எடுத்து வரும் என நிபுணர்கள் கூறினர்.

locust force,tamil nadu,agriculture,experts,farmers ,வெட்டுக்கிளி படை, தமிழகம், வேளாண்துறை, நிபுணர்கள், விவசாயிகள்

ஆனால், நாசக்கார வெட்டுக்கிளி படை தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இல்லை என வேளாண் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்படிதான் நம் தமிழகத்தின் வெயிலுக்கு கொரோனா வராது என்று சொன்னார்கள்.

இப்போது தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது என்றும் கூறி கவலையடைகின்றனர் விவசாயிகள். எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேளாண்துறையினர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags :