Advertisement

ராகுல்காந்தி நடைபயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை

By: Nagaraj Sun, 25 Dec 2022 10:21:22 AM

ராகுல்காந்தி நடைபயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை

புதுடில்லி: அதை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை... ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு ஒருபோதும் கிடைக்காது. 2024 தேர்தலில் நாங்கள் (என்டிஏ) 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், ராகுல் காந்தி எப்படி பிரதமராக முடியும்?. காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் பெறாது.

congress,the party,will decide,the volunteers,no fear ,காங்கிரஸ், கட்சி, முடிவு செய்யும், தொண்டர்கள், பயமில்லை

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நரேந்திர மோடி வலிமையான பிரதமர். அவரது தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது, வளர்ச்சியின் திசையில் செல்கிறது, நாங்கள் பயப்பட ஒன்றுமில்லை.

காங்கிரஸ் கட்சிதான் பயத்தில் உள்ளது. முன்னதாக சனிக்கிழமையன்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், 2024ல் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள். 2024 தான் அதை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

Tags :