Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அப்படி எதுவுமே செல்லவில்லை... தலைமை கழகம் செல்வது பற்றி விளக்கம்

அப்படி எதுவுமே செல்லவில்லை... தலைமை கழகம் செல்வது பற்றி விளக்கம்

By: Nagaraj Sat, 10 Sept 2022 2:21:42 PM

அப்படி எதுவுமே செல்லவில்லை... தலைமை கழகம் செல்வது பற்றி விளக்கம்

சென்னை: நீதிமன்ற அனுமதியுடன்தான் வரவேண்டும்... முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல விரும்பினால், நீதிமன்ற அனுமதியுடன் வர வேண்டும் என, காவல்துறை பதில் அளித்ததாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த தகவலும் வரவில்லை என, பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, சென்னை, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., - பிரபாகர், நேற்றுமுன்தினம் மனு அளித்தார்.

head office,petition,police,court,permit,information ,தலைமை அலுவலகம், மனு, போலீசார், நீதிமன்றம், அனுமதி, தகவல்

'பன்னீர்செல்வம் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல, நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால், உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம்' என, போலீஸ் தரப்பில், பன்னீர்செல்வம் தரப்புக்கு பதில் அளிக்கப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து, போலீஸ் நிலையத்தில் மனு அளித்த, பிரபாகர் கூறுகையில், ''போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து, அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. பன்னீர்செல்வம் ஊரில் இருந்து வந்ததும், அனைவருடனும் கலந்தாலோசித்து தலைமை அலுவலகம் செல்லும் தேதியை அறிவிப்போம்,'' என்றார்.

Tags :
|
|
|