Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மற்றும் திண்டுக்கலில் (ஜூன் 14) மின்தடை என அறிவிப்பு

திருநெல்வேலி மற்றும் திண்டுக்கலில் (ஜூன் 14) மின்தடை என அறிவிப்பு

By: vaithegi Mon, 13 June 2022 5:37:05 PM

திருநெல்வேலி மற்றும்  திண்டுக்கலில் (ஜூன் 14) மின்தடை என அறிவிப்பு

திருநெல்வேலி: ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பாதையில் நிகழும் சில பிரச்சனைகளால் விபத்துகள் நேரிடுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்வினியோகம் பெரும் சுற்று வட்டார பகுதிகளான பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை தெற்கு வள்ளியூர் மற்றும் வள்ளியூர் டி.பி ரோடு, நம்பியான்விளை, ராஜாக்கமங்கலம், வாகைகுளம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், கோவனேரி, ஏ.எம்.ஆர்.எல். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு நாளை (ஜூன் 14) செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் வினியோகம் இருக்காது என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.

resistors,maintenance work,power supply ,மின்தடை , பராமரிப்பு பணி,மின் வினியோகம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் ராமராஜபுரம் மற்றும் லட்சுமணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 14ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான ராமராஜபுரம் மட்டபாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, கருப்பட்டி, இரும்பாடி நாச்சிகுளம், பொம்மன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அந்தந்த துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :