Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்காளத்திற்கு விமானத்தில் வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு

மேற்கு வங்காளத்திற்கு விமானத்தில் வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு

By: Monisha Tue, 26 May 2020 5:01:41 PM

மேற்கு வங்காளத்திற்கு விமானத்தில் வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு

இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை நேற்று தொடங்கியது. அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் விமான சேவையை நேற்று தொடங்கவில்லை. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 28ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கு வங்காள மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்காளத்திற்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வருமாறு:-
* விமான நிலையத்திற்கு வந்ததும் அறிகுறி ஏற்பட்ட பயணிகளின் மாதிரிகளை பரிசோதிக்க அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

* மிதமான அல்லது கடுமையான அறிகுறிகளைக் கொண்ட பயணிகளுக்கு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படும்.

india,domestic air service,west bengal,amphan storm,28th may ,இந்தியா,உள்நாட்டு விமான சேவை,மேற்கு வங்காளம்,அம்பன் புயல்,மே 28ம் தேதி

* மேற்கு வங்காளம் வரும் பயணிகள் அனைவரும், தங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று இல்லை என்று கூறி சுய உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

* பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தபின்னர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

* நோய் அறிகுறியற்ற பயணிகள் 14 நாட்களுக்கு வீட்டில் சுயமாக உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் என்ற ஆலோசனையுடன் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

* ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உள்ளூர் மருத்துவ அதிகாரி அல்லது மாநில அழைப்பு மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

* வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி தெளிப்பு போன்ற பணிகள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* விமான நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில், கிருமிநாசினிகள் போதுமான அளவு வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|