Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கலில் இந்த தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

திண்டுக்கலில் இந்த தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

By: vaithegi Sat, 12 Aug 2023 10:39:30 AM

திண்டுக்கலில் இந்த தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

திண்டுக்கல்: தமிழகத்தில் வருகிற ஆக, 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மற்றும் குடியரசு தினம் சுதந்திர தினம் காந்தி ஜெயந்தி, மிலாடி நபி ஆகிய தினங்களை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படும்.

அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் நாட்டின் 76 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

bars,dindigul ,மதுக்கடைகள் ,திண்டுக்கல்

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் எப்.எல்.1 உரிமம் பெற்ற உரிமம் பெற்ற சில்லறை டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுகூடங்கள் அனைத்தும் ஆக. 15ம் தேதி அன்று மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி யாரும் மது விற்பனை செய்ய கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார்.

Tags :
|