Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வருகிற செப்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிப்பு

புதுக்கோட்டையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வருகிற செப்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிப்பு

By: vaithegi Sat, 09 Sept 2023 11:59:54 AM

புதுக்கோட்டையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வருகிற  செப்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிப்பு

புதுக்கோட்டை : தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதாவது, தலைமையாசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியரை கொண்டு நிரப்பப்படும் எனவும், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

vacancies,pudukottai,teacher ,காலிப்பணியிடங்கள் ,புதுக்கோட்டை,ஆசிரியர்

மேலும், சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்களுக்கு ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும் எனவும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தற்காலிகமாக ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுவதால் தேர்வு செய்யும் ஆசிரியர்கள் ஏப்ரல் 2024ம் ஆண்டு வரையிலும் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செப்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சரியான ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் முலமாகவோ அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :