Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு

By: Nagaraj Sun, 26 Feb 2023 1:59:12 PM

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு

சென்னை: ரூ.1000 உரிமைத்தொகை பற்றி மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனை அடுத்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.

இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

chief minister,royalty ,முதலமைச்சர் ,உரிமைத்தொகை, நீட் தேர்வு, விலக்கு, காலை உணவு

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். அத்தொகுதிக்குட்பட்ட சம்பத் நகரில் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். இதை தொடர்ந்து காந்தி சிலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்.

எம்மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம் என அவர் பேசினார்.

Tags :