உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு
By: Nagaraj Mon, 10 July 2023 8:32:43 PM
கொழும்பு: கல்வி அமைச்சர் தகவல்... 2022ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் குறித்த பெறுபேறுகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் நத்தார் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
exams |