Advertisement

சீர்காழியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Thu, 17 Nov 2022 08:38:31 AM

சீர்காழியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சீர்காழி: பள்ளிகளுக்கு விடுமுறை .... வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

holiday,sirkazhi ,விடுமுறை ,சீர்காழி

மேலும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் லலிதா அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :