Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: Nagaraj Tue, 02 Aug 2022 4:51:31 PM

ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சென்னை: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு... ஆடிப்பெருக்கு விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் சிறப்பு விழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

for tomorrow,holidays,schools,colleges ,
ஆடிப்பெருக்கு, நாளை, விடுமுறை, பள்ளிகள், கல்லூரிகள்

அதன்படி நாளை தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நாளை செயல்படாது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 27ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆற்றில் தண்ணீர் தடையின்றி செல்கிறது. இதனால் புது மணத்தம்பதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :