Advertisement

அந்தியோதயா ரயில் இயக்கம் குறித்து அறிவிப்பு

By: Nagaraj Fri, 17 Mar 2023 11:24:37 PM

அந்தியோதயா ரயில் இயக்கம் குறித்து அறிவிப்பு

மதுரை: அந்தியோதயா ரயில் இயக்கம் குறித்து பயணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மதுரை மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள மேலப்பாளையம்-நாங்குநேரி இடையே இரட்டை ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் நாளை (18ம் தேதி) முதல் 23ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் (20691), 19–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) நெல்லை–நாகர்கோவில் இடையே இயக்கப்படும்.

இந்த ரயில் நெல்லையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும். இதேபோல் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22627/22628) 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு திசைகளிலும் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும்.

antiyothaya,egmore,nellai,similarly, ,தாம்பரம், நெல்லை, மேலப்பாளையம், ரயில்

திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் நெல்லையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். இதேபோல், நாகர்கோவில் வாராந்திர மூன்று முறை விரைவு ரயில் (22657) தாம்பரத்தில் இருந்து 22ம் தேதியும், நாகர்கோவிலில் 23ம் தேதியும் புறப்படும்.

தாம்பரம் வாராந்திர மூன்று முறை சேவை ரயில் (22658) விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், 23ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நாகர்கோவில் வாராந்திர சர்வீஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (12667), 24ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்படும் எழும்பூர் வாராந்திர சர்வீஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (12668) விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.

Tags :
|
|