இந்த மாவட்டத்தில் நவம்பர 11 தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Tue, 08 Nov 2022 5:12:13 PM
வேலூர் : தனியார் வேலைவாய்ப்பு முகாம் .... தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மணவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் வரும் நவம்பர் 11ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த தேசிய தொழில் சேவை திட்டமிட்டுள்ளது. மாதம் தோறும் 2-ம் வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் வேலூர் மாவட்டம் மேல்மணவூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல நிறுவனங்களும் கலந்து கொண்டு தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. எனவே, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையதிற்கு முகாம் நடைபெறும் நாளன்று கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
இதையடுத்து இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு பதிவு செய்து கொள்ள நவம்பர் 9ம் தேதி காலை 10 மணி முதல் நவம்பர் 10ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்கள், நவம்பர் 11 காலை 10:05 மணி முதல் மாலை 5:05 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் தவறாது கலந்து கொண்டு பயனடைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு முகாமினை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு [email protected] என்ற மின்அஞ்சல் முகவரி மற்றும் 04162290042 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.