ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய அரசு சார்பில் நவ. 18ல் குறைதீர்ப்பு முகாம்
By: vaithegi Wed, 15 Nov 2023 3:52:14 PM
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்போரின் குறைகளை தீர்க்க அரசு குறைதீர் முகாம் நடத்தி கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்த குறைதீர் முகாம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் வகையில் இந்த முகாமில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற திருத்தங்கள் செய்யலாம்.
வழக்கமாக குறைதீர்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. ஆனால் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதி குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படவில்லை.
அதனால் குறைதீர்ப்பு முகாம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் முகாம் நடத்தபடும் என்று உணவு வழங்கல் துறை அறிவித்து உள்ளது.