நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,140 ஆக உயர்வு
By: Monisha Mon, 12 Oct 2020 2:04:05 PM
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,140 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோன வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 6,981 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 26 மற்றும் 30 வயதுடைய டாக்டர்கள், மோகனூர் அரசு பள்ளி ஆசிரியர், சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர், வசந்தபுரம் அரசு பள்ளி ஆசிரியர், அரசு பஸ் டிரைவர், பரமத்தி கிராம உதவியாளர் உள்பட 159 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
மாவட்டத்தில் வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்திவேலூர் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,140 ஆக உயர்ந்து உள்ளது.
இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 154 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 5,969 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 87 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 1,084 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.