விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,691 ஆக உயர்வு
By: Monisha Wed, 16 Sept 2020 09:35:07 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 3,759 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 3,285 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
மாவட்டத்தில் 13,138 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 19 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 230 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,691 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,383 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் 3,285 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் போதிய அக்கறை காட்டாத நிலை தொடர்கிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரம் மாவட்ட மக்களுக்கு தெரியமுடியாத நிலை தொடர்கிறது.