கேரளாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா பரவல்; பாதித்தவர்கள் எண்ணிக்கை 513 ஆக உயர்வு
By: Nagaraj Sun, 10 May 2020 8:31:09 PM
மேலும் 7 பேருக்கு கொரோனா பரவல்.. கேரளாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662 லிருந்து 62,939 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981லிருந்து 2,109 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847லிருந்து 19,358 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் 779 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,3800 பேர் குணமடைந்துள்ளனர்.ஆனால் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு பரவிய மாநிலம் கேரளா ஆகும்.நாளடைவில் அங்கு கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20 பேர் அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.