Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதையில் தடுமாறினாலும் பைக்கை அலேக் செய்து சென்ற நூதன திருடர்கள்

போதையில் தடுமாறினாலும் பைக்கை அலேக் செய்து சென்ற நூதன திருடர்கள்

By: Nagaraj Tue, 01 Nov 2022 10:45:37 PM

போதையில் தடுமாறினாலும் பைக்கை அலேக் செய்து சென்ற நூதன திருடர்கள்

மதுரை: போதையில் நூதன முறையில் பைக்கை திருடிச்சென்றவர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரையில் சாக்குமூட்டையை போர்த்திகொண்டு போதையில் தடுமாறியபடி இரு சக்கர வாகனத்தை நூதனமாக திருடி சென்றுள்ளனர் நூதன திருடர்கள். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை மேல் அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவைத்துள்ளார்.

bike theft,theft,thieves,cctv footage,investigation ,பைக் திருட்டு, நூதனம், திருடர்கள், சிசிடிவி காட்சிகள், விசாரணை

காலையில் எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போன நிலையில் அருகில் தேடிப்பார்த்த நிலையில் கீரைத்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, திருப்பதியின் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவை பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் உடல் முழுவதிலும் சாக்குப்பையை போர்த்திகொண்டு மதுபோதையில் தள்ளாடியபடி வந்து திருப்பதியின் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கீரைத்துறை போலிசார் பக்க திருடிசென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags :
|