Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பன்னீர் செல்வம் நாக் அவுட் ஆகிவிட்டார்... முன்னாள் அமைச்சர் கிண்டல்

ஓ.பன்னீர் செல்வம் நாக் அவுட் ஆகிவிட்டார்... முன்னாள் அமைச்சர் கிண்டல்

By: Nagaraj Tue, 21 Feb 2023 11:23:00 AM

ஓ.பன்னீர் செல்வம் நாக் அவுட் ஆகிவிட்டார்... முன்னாள் அமைச்சர் கிண்டல்

சென்னை: நாக் அவுட் ஆகிவிட்டார்... ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

knockout,playoff,o.p.s. former minister,knocked out ,நாக் அவுட், ஆட்டகளம், ஓ.பி.எஸ். முன்னாள் அமைச்சர், நாக் அவுட்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்ச் மாதம் முப்பெரும் விழா நடத்த முடிவெடுத்துள்ள ஓபிஎஸ் அணி, மார்ச் மாதம் விடியல் பிறக்கும் எனத் தெரிவித்தது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "கூடுவார் கூட சேர்ந்தால் அந்தக் காற்றுதான் அடிக்கும் என்று சொல்வார்கள். விடியல் அரசு எனச் சொல்லும் திமுகவோடு சேர்வதால், இவர்களும் விடியல் நடக்கும் என்கிறார்கள். ஓபிஎஸ் திமுகவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அவர் இப்போது ஆட்டக் களத்திலேயே இல்லை, அவர் நாக் அவுட் ஆகிவிட்டார். அவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை" என்றார்.

Tags :